உந்தன் பார்வை
தீண்டும் நேரம்
எந்தன் இதயம்
துடிக்காது போல
அதிர வைக்கும்
இது என்ன சோகம்
என்னை சுட்டு விடும்
கனவாகி போகாதோ
அவளின் அந்த ஒரு
வார்த்தை!!
நெஞ்சம் மறப்பதில்லை
அவளின் மேல் நான்
கொண்ட ஆளுமை
அழகாய் நேர்த்தியாய்
வெளிப்படுத்தி விட
வேண்டாம் என்று சொல்லி
சாம்பல் ஆக்கி என்னை
இல்லாமல் செய்தது.
என்ன நியாயம்..
கள்வன் காதலை
காணிக்கை ஆக்கி
எந்தன் இதயம் கவர
தித்தம் அவனில்
தரிசனம் ஆகிறேன்..
வரம் தரவே அவனில்
நான் இதயம் ஆகி
அவனுடன் என்னை
பகிர்ந்தேன்..
பூக்களின் மௌனம்
சொல்லுது என்னை
நீ என்னவாக நினைத்தாய்
என்பதை சொட்ட
சொட்ட உயிர்
மழையின் ஈரமானது
என்னில் நீ
விதையாய் விழுந்து
அழமாய் ஊன்றி
போனாய்! நம்
காதலை வளர்க்க!!
நான் உன்
தேன் இதழ் பருகும்
சில மணி நேர
உதட்டு சாயமடி
கண்ணே!!
எந்தன் பார்வை
பாயும் வேகம் உந்தன்
மீது கொள்ளும் தீரா
காதல் மோகம்!!!
தித்திக்காதோ?
திகட்டாதோ?
உந்தன் உடல்
மேல் நெளிந்து
உருண்டு திரண்டு
நான் கண்டு பிடிக்காமல்
போகுவேன் என்றே
உந்தன் பார்வை
கேட்குதடி அது சரியோ!!
தேடல் தொடங்கவா!!